ஒரே பொண்ணு ஓடி போயிட்டா எதுக்கு வாழனும்! தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த பெற்றோர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொளையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி-சுமதி தம்பதி.

இவர்களது மகள் ஜனனி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி மருத்துவம் பயின்று வருகிறார். கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்த ஜனனி, தற்போது கல்லூரி திறக்கப்பட்டதால் மீண்டும் கோவைக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது காதலனான இறைச்சிக்கடை உரிமையாளர் சம்பத் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அதற்கான புகைப்படத்தை தனது தந்தைக்கு வாட்ஸ்அப்-பில் அனுப்பியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பெற்றோர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தகவல் அறிந்த குன்னத்தூர் போலீசார், சடலத்தை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version