தேர்தல் பணிகளுக்காக துணை ராணுவத்தினர் நெல்லை வருகை

மக்களவை தேர்தல் பணிகளுக்காக உத்தரப் பிரதேசத்தில் இருந்து துணை ராணுவத்தினர் நெல்லை மாவட்டம் வந்தனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதேபோல், பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் தமிழகம் வரத்தொடங்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு உத்தரப் பிரதேசத்திலிருந்து உதவி கமாண்டர் அஜய் ஆனந்த் தலைமையில் 50க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் வந்துள்ளனர் . இவர்களுக்காக பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்வியியல் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version