மக்களுக்கு பாதுகாப்பு குறித்து துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் அமைதியாக நடத்திட துணை ராணுவ படையினர், சிறப்பு காவல் படையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் தனி தொகுதியில் 15 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழக காவல் துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

Exit mobile version