பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நெல்லை மாவட்டம், பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள வற்றாத அருவிகளான அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்றும், நாளையும், விடுமுறை என்பதால், அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் வனச்சோதனை சாவடிகளில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Exit mobile version