ஆ.ராசாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

முதலமைச்சரை நாகரிமற்ற முறையில் பேசிய ஆ.ராசாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பதவிவெறியில் ஆ.ராசாவின் உளறல் மூலம் எந்த அளவிற்கு அவரும், திமுகவும் தரம் தாழ்ந்துள்ளது என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தரக்குறைவான சொற்களால் வசைபாடுவதால் பேசப்படுபவர் ஒருபோதும் குறைந்து போவதாய் அர்த்தமல்ல எனக் கூறியுள்ள துணை முதலமைச்சர், மாறாக அது பேசுபவருடைய அறிவீனத்தையே பிரதிபலிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர் சபை நாகரிகத்துடனும், அரசியல் மாண்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சுயவாழ்வில் முதலில் தாம் சரியாக இருக்கிறோமா என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு பேச வேண்டும் என அறிவுறுத்தியுள்ள துணை முதலமைச்சர், இனியேனும் இப்படி தரமற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக்கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.

Exit mobile version