பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நம்பெருமான்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியதை அடுத்து, பகல் பத்து விழாவின் 6-ம் நாளான இன்று, ஸ்ரீ நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான, திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. வரும் ஜனவரி 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில், பகல் பத்து விழாவின் ஆறாம் நாளான இன்று, ஸ்ரீ நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Exit mobile version