ஊத்தங்கரையில் கிராம மக்கள் சார்பாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சீர்வரிசை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிராம மக்கள் சார்பாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. ஊத்தங்கரை அருகே உள்ள நாப்பிரம்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் பள்ளிக்கு தேவையான சேர், டேபிள் மற்றும் கல்வி உபகரணங்களை மேள தாளத்துடன் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

ஆசிரியர்கள் அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்வரிசைப் பொருட்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version