அம்மை நாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பெற்றோர்கள் கல்விச் சீர்

திண்டுக்கல் மாவட்டம் அம்மை நாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 70 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் பள்ளிக்கு தேவையான பொருட்களை பெற்றோர்கள் கல்விச் சீராக வழங்கினர். மேஜை, நாற்காலிகள், பீரோ, நோட்டுப் புத்தகங்கள், குடங்கள் உள்ளிட்ட பொருட்களை  தலைமையாசிரியர் தலைமையில் மாணவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கல்வி சீர் எடுத்துவந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Exit mobile version