பஞ்சமி நில விவகாரம்: ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

பஞ்சமி நில விவகாரம் தொடர்பான வழக்கில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

பஞ்சமி நிலத்தில் திமுகவின் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக மீட்க வேண்டும் எனக் கோரியும் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகாரளித்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமானது திமுகவின் இளைஞரணித் தலைவரான உதயநிதி ஸ்டாலினை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 7ம் தேதி ஆணையத்தின் முன் ஸ்டாலின் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது.

Exit mobile version