பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம்

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க மார்ச் 31-ந் தேதி கடைசி என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் இந்த கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இவற்றை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. ஆனாலும் இன்று முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version