தொடர்ந்து 26 நாட்களாக பாம்பன் பாலம் பராமரிப்பு பணியால் ரயில் சேவை நிறுத்தம்

நூற்றாண்டுகள் கடந்த ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 26 நாட்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

நூற்றாண்டுகள் கடந்துள்ள பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால் 26 நாட்களாக ரயில்போக்குவரத்து நிறத்தப்பட்டு சீரமைப்புப்பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. வரும் ஜனவரி    2-ம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாம்பன் பாலம் பராமரிப்பு பணியால் ராமேஸ்வர ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா துறையின் வருகையும் குறைந்துள்ளதால் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version