முதுகுளத்தூர் பகுதிகளில் அமோகமாக நடைபெறும் பதநீர் விற்பனை

முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை கால பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வறண்ட பகுதி என்பதால் இங்குள்ள பனை தொழிலாளர்கள் பனை தொழிலையும் பனை மரத்தையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், பூங்குளம், விளத்திக்கூட்டம், ஏனாதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பதநீர் விற்பனை துவங்கியுள்ளது. கோடை காலங்களில் உடலுக்கு நன்மை அளிக்கும் உணவாக இருப்பதால் இந்த பகுதிகளில் காலை, மாலைகளில் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாயல்குடி செல்லும் சாலையோரத்தில் உள்ள பனைமரங்களில் உடனுக்குடன் பதநீர் இறக்கி விற்பனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version