பக்தர்களின் வருகையால் 32 நாட்களில் நிறைந்த பழனி உண்டியல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 60 லட்சம் ரூபாயை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் 32 நாட்களில் உண்டியல் நிறைந்தது. இதனையடுத்து உண்டியல் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக 2 கோடியே 60 லட்சம் ரூபாயும்,824 கிராம் தங்கமும், 13 கிலோ வெள்ளியும் செலுத்தியுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளாக ஆயிரத்தி 426 கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Exit mobile version