ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பழனியில் முருகனுக்கு சிறப்பு பூஜை

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் ஆடிமாத கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விளாபூஜையில் சந்நியாசி அலங்காரத்துடனும், காலசந்தி பூஜையில் வேடர் அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

மேலும் மாலை மலைக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பழனி அடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version