காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீரில் இந்திய நிலைகளை குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. எல்லைப் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தை மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிராக இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். கடந்த 3 நாட்களில் 7வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version