பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரிகள் இருவர் பலி

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரிகள் இருவர் மரணமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வார மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தின.

இந்திய தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருதரப்பினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ராமன் தாப்பா மற்றும் காமர் பகதூர் தாப்பா ஆகிய 2 அதிகாரிகள் மரணமடைந்தனர். இந்த ஆண்டு மட்டும், எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 89 இந்திய பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Exit mobile version