காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறிய பாகிஸ்தான் வீரர்கள்

காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை அந்நாட்டு ராணுவத்தினர் வெள்ளைக் கொடியுடன் வந்து பெற்றுச் சென்றுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அடிக்கடி ஊடுருவுவதும் தாக்குதல் நடத்துவதும் என அத்துமீறி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் ஹாஜிப்பூர் பிரிவில் இந்தியப் படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் குலாம் ரசூல் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் உடலை எடுத்துச் செல்லும் முயற்சியின்போது மற்றொரு வீரரும் கொல்லப்பட்டார். அதன்பின்னர் இருவரின் உடல்களையும் எடுத்துச் செல்லப் பாகிஸ்தான் படையினர் நடத்திய முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை. இந்நிலையில் நேற்று வெள்ளைக்கொடி ஏந்திய பாகிஸ்தான் வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்து, உயிரிழந்த வீரர்கள் இருவரின் உடல்களையும் இந்திய ராணுவத்திடம் இருந்து பெற்றுச் சென்றனர்.

Exit mobile version