இந்தியாவில் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய காவல்துறை

குஜராத்தின் கட்ச், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் ட்ரோன் ஒன்று இந்திய எல்லையான கட்ச்சில் நுழைந்தது. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து, விரைந்து வந்த காவல் துறை, ட்ரோனை சுட்டு செயலிக்க செய்தனர். இந்த தகவலை போலீசாரும் உறுதிப்படுத்தி, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ட்ரோன் உளவு பார்க்கும் நோக்கத்தில் பறக்க விடப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு, புல்வாமா தாக்குதல் போல் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கடந்த செவ்வாய்கிழமை உளவுத்துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version