இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் கடும் சண்டை

இந்திய எல்லையில் நடந்த சண்டையில் 7 பாகிஸ்தான் நிலைகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இதில் பாகிஸ்தானின் 7 நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்ச் மற்றும் ரஜவ்ரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் தரப்பில் சில வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவரும், 5 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

Exit mobile version