ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவம்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் நிகழ்த்திய தாக்குதல்களில் 50 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் இடைவெளியிட்டு பலமுறை தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடிக் கொடுத்து வருகின்றனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Exit mobile version