ராணுவ தொப்பியுடன் போட்டியில் பங்கேற்பு: இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க ஐசிசிக்கு பாக். வலியுறுத்தல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர். மேலும், இந்த போட்டிக்கான ஊதியத்தையும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினர்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இந்த விவகாரத்தில் ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணி தங்களது தொப்பியை அணியாமல் ராணுவ தொப்பி அணிந்ததை உலகமே பார்த்ததாகவும், இந்த விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்புவதற்கு முன்னதாக ஐசிசி தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷா மெஹ்மூத் குரேஷி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version