கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!

கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கிய 14-வது ஐபிஎல் போட்டி, அகமதாபாத், டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் கொண்ட இந்த தொடரில் 29 லீக் ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில், கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறவிருந்த 30-வது லீக் ஆட்டம் திடீரென ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இன்று நடைபெறவிருந்த ஆட்டம் மற்றொரு நாளுக்கு ஒத்தி வைப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Exit mobile version