தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது : அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பிரச்னை இல்லை, ஆனால் தீவிரவாதத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆசிய சொசைட்டி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது, காஷ்மீர் பிரச்னையை கையாள பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்ததாகவும், தற்போது காஷ்மீரை கடந்து இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதம் பயன்படுத்தப்படுவதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

Exit mobile version