ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதற்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். தங்தார், கன்சல்வான் ஆகிய பிரிவுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

Exit mobile version