பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவம் தயார்: தலைமைத் தளபதி பிபின் ராவத்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்திய ராணுவம் எதற்கும் தயாராக உள்ளதாகவும், மத்திய அரசு உத்தரவிடும் பட்சத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடனடியாக மீட்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை குறைக்க உள்ளூர் மக்கள் முழு ஒத்துழைப்பை தரவேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ராணுவத் தலைமைத் தளபதியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

Exit mobile version