பத்மஸ்ரீ விருது பெற்ற ஐராவதம் மகாதேவன் காலமானார்

தினமணி முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 88.

பத்மஸ்ரீ விருது பெற்ற ஐராவதம் மகாதேவன், தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர். தமிழ் பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்து வந்த அவர், சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழி குடும்பத்திற்கும் உள்ள உறவை எடுத்துரைத்தவர். திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த மகாதேவன், கடந்த 1954 முதல் 1981 வரை 27 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணியில் இருந்தார்.

1987-ம் ஆண்டு முதல் 91 வரையில் தினமணி ஆசிரியராக இருந்த மகாதேவனுக்கு கடந்த 2009 -ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மகாதேவன், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். அவரது இறுதி சடங்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

 

Exit mobile version