பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசனின் சிறந்த தொழில் மற்றும் வர்த்தக செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சிறந்த சமூக சேவையினை அங்கீகரித்து கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்து விளங்கும் கர்நாடக இசைப்பாடகர்கள் லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம், சமூக மற்றும் கலாச்சார அடையாளங்களில் ஓவியங்களை சிறப்பாக வரையும் மனோகர் தேவதாஸ், சமூக சேவகர் ராமகிருஷ்ணண், நாதஸ்வர இசைக்கலைஞர்கள் காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி, விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கும் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் இவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு விருதுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version