சீர்காழி அருகே மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

சீர்காழி அருகே, சுமார் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழை காரணமாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழியில், சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக நீரில் மூழ்கியது. மேலும், மழைநீர் வடியாமல் வயல்களில் தேங்கியிருப்பதால், விவசாயிகள் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர். செம்மங்குடி கிராமத்தில் சுமார் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்   நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version