தேனியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரடப்பட்டுள்ள நெல் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரியகுளம், வடுகபட்டி, மேல் மங்கலம் , ஜெயமங்கலம், சில்வார்பட்டி, நல்ல கருப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகிறார்கள். என்.எல்.ஆர் ரக நெல்லை பயிரிட்டுள்ளதாகவும் 120 நாட்களில் மகசூலை இது தருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டு போதிய மழை பெய்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாததால், நெல் நன்கு விளைந்து விளைச்சலுக்கு தயாராக உள்ளது. நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் மகிழ்ச்சியோடு விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.