கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம் – கலங்க வைக்கும் காளை!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உயிரிழந்த ஜல்லிகட்டு காளையின் அருகே மற்றொரு காளை நடத்திய பாசப்போராட்டம் காண்போரைக் கண்கலங்கச் செய்தது.

காமராஜ் நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான காளை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. பொதுமக்கள் பார்வைக்காக இறந்த காளை கோவிலுக்கு முன்பாக வைக்கப்பட்டது. இதைக்கண்ட மற்றொரு காளைமாடு தவித்துக் கொண்டு, உயிரிழந்த மாட்டின் அருகில் நின்று கண்ணீர் விட்டு சத்தமிட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் காளையை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். பின்னர், உயிரிழந்த காளைக்கு சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version