ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு குறித்து இன்று தீர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல் முறையீடு செய்தார். இதில், சிதம்பரத்துக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கடந்த 16-ம் தேதி கைது செய்தது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில், ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், ஜாமீன் வழங்குவது குறித்து டெல்லி உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

Exit mobile version