சோட்டாராஜன் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார் ப.சிதம்பரம்

சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவு படி திகார் சிறையில் 7ம் எண் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டு உள்ளார். பிரபல கிரிமினல் குற்றவாளியான சோட்டா ராஜன் அடைக்கப்பட்டுள்ள அதே சிறை வளாகத்தில் ப.சிதம்பரமும் அடைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையை பொறுத்தவரை ஊழல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை 7 ஆம் எண் சிறையில் அடைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி, தனி அறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் அவரது மகனான கார்த்தி சிதம்பரமும் இதே சிறையில், அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version