CAA-வுக்கு எதிராக ஸ்டாலினுடன் சேர்ந்து சிதம்பரம் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

குடியுரிமைச் சட்டத்திற்கு அப்போது ஆதரவு தெரிவித்து விட்டு, தற்போது ஸ்டாலினுடன் சேர்ந்து சிதம்பரம் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில், சமூக நலத்துறை சார்பாக பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டு, 184 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கமும், திருமண உதவித் தொகையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதை குறிப்பிட்டார். இதே திமுக ஆட்சிக் காலத்தில் தேர்தல் நடைபெற்றிருந்தால், பல்வேறு பிரச்னைகள் அரங்கேறியிருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்டு, தற்போது ஸ்டாலினுடன் சேர்ந்து சிதம்பரம் எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.

Exit mobile version