ப.சிதம்பரம் நீதிமன்ற காவல் நவ. 13-ம் தேதி வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரம் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான சிபிஐ வழக்கில் அவருக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை வழக்கிற்காக அவர் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், புதன்கிழமையுடன் முடிவடைய இருந்த அவருடைய நீதிமன்ற காவலை நவம்பர் 13 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் மேலும் ஒரு நாள் விசாரணை கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ப.சிதம்பரத்திற்கு 3 வேளை வீட்டு உணவு அளிக்கவும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

Exit mobile version