ப.சிதம்பரம் நீதிமன்றக் காவல் அக். 17 வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வாழக்கில் கைதாகியுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் வரும் 17 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது விசாரணை காவல் முடிவடைந்த நிலையில், மேலும் 14 நாட்களுக்கு காவலை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ப.சிதம்பரத்திற்கு வீட்டில் இருந்து உணவு வழங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ப.சிதம்பரம் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதனை அவரச வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி ரமணா கூறியதையடுத்து நாளை ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version