ஓசியில் விளம்பரம் தேடுபவர் செந்தில் பாலாஜி-அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆத்துப்பாளையம் அணையிலிருந்து தண்ணீரினை திறந்து வைத்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியை ஓசியில் விளம்பரம் தேடுபவர் என்று கடுமையாக விமர்சித்தார்…

கரூரை அடுத்த அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கார்வழி பகுதியில் உள்ள ஆத்துப்பாளையம் நீர் தேக்க அணையை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அங்கு ஒரிரு தினங்களுக்கு முன்னாள் வந்த மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியை, ஓசியில் விளம்பரம் தேடுபவர் என்றும், அவர் அணையைப் பார்வையிடுவது போல வந்து போஸ் கொடுத்து விட்டு சென்றுள்ளார் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், நீர்மேலாண்மை திட்டத்தில் அதிமுக அரசை பற்றி செந்தில் பாலாஜி குறைகூறியுள்ளதற்கு, நீர்மேலாண்மையில் டாக்டர் பட்டம் பெற்றவரைப் போல செந்தில் பாலாஜி நடந்துகொள்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார்.

Exit mobile version