புல்வாமா தாக்குதலுக்கு எதிராக போராடும் வெளிநாடுவாழ் இந்தியர்கள்

லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்து தங்களின் எதிர்ப்புகளை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் லண்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து வழங்கி வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Exit mobile version