சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்றாவது நாளாக ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் கூட்டம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி செல்கின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக டெம்டெசிவிர் மருத்து பரிந்துரைக்கப்படுகிறது.

ரெம்டெசிவிர் மருந்து பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்காக இந்த சிறப்பு மையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

இந்த நிலையில், ரெம்டெசிவர் மருந்து பெறுவதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவதால், மூன்றாவது நாளாக இன்றும் சிறப்பு மையத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கி சென்றனர்.

கூட்டம் அதிகரிப்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் அதிகரித்துள்ளனர்.

Exit mobile version