கடந்த 2 நாட்களில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 4 ஆயிரம் பேர் பலி!

அமெரிக்காவில் கடந்த 2 நாட்களில் கொரோனாவுக்கு 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளது, சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 34 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 15 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அங்கு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் வாஷிங்டன் தொடங்கி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு கடந்த இரண்டு நாட்களாக, நாள் ஒன்றிற்கு 2 ஆயிரம் பேர் உயிரிழந்தது, சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்கா, கொரோனாவை கட்டுப்படுத்த திணறி வருவது, சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version