விறுவிறுப்பான கட்டத்தில் ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…

ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாள் ஆட்டம் மட்டும் எஞ்சி உள்ள நிலையில், வெற்றி பெறப் போவது இந்தியா? இங்கிலாந்தா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 466 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா, புஜாரா, பண்ட், தாக்கூர் ஆகியோர் சிறப்பாக ஆடி இந்திய அணியின் ரன்குவிப்பிற்கு உறுதுணையாக அமைந்தனர். இதனால், இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

Exit mobile version