சிறுவன் உதவியோடு வெளியில் செல்லும் பெற்றோர்கள்

பார்வையற்ற தனது பெற்றோரைப் பத்திரமாக அழைத்துச் செல்லும் சிறுவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கோவை, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நல்லசாமி-ஜெயலட்சுமி தம்பதியர். பிறவியில் இருந்தே பார்வைக் குறைபாடுடைய இவர்களுக்கு 9 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளார். கார்த்திக், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர் இருவரும் வெளியில் செல்ல வேண்டும் என்றால், கார்த்திக் அவர்களது கைகளைப் பிடித்து அழைத்து செல்கிறார். எங்கு செல்ல வேண்டும் என்றாலும், கார்த்திக் உதவியில்லாமல் அவர்கள் செல்வது இல்லை. இந்த நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர்களை, கார்த்திக் பத்திரமாக அழைத்து சென்றதை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து அவரைப் பாராட்டினர்.

Exit mobile version