31ம் தேதி வரை தமிழகத்திற்கு வரும் வெளிமாநில வாகனங்களுக்கு தடை- தமிழக அரசு நடவடிக்கை

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில், நோய் பரவுதலை தடுக்கும் விதமாக, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை இன்று நள்ளிரவு முதல் 31 ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்றவற்றுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பொது மக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிவித்துள்ளது.

Exit mobile version