அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர், அக்கட்சியிலிருந்து விலகி, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையில், தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தென் வணக்கம் பாடி கிராமத்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், திமுக கிளைச் செயலாளருமான இளமாறன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையில், தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் புதிதாக இணைந்தவர்களை, சால்வை அணிவித்து, அமைச்சர் வரவேற்றார்.
 

Exit mobile version