நட்சத்திர ஏரியில் நடைபெற்ற அலங்காரப் படகுப்போட்டி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்ற அலங்காரப் படகுப் போட்டியை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

கோடைவிழாவை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் படகு அலங்கார அணிவகுப்பு போட்டி நடைபெற்றது. சுற்றுலாத்துறை, தோட்டக் கலைத்துறை , ஊராட்சி ஒன்றியம் ஆகிய துறைகள் பங்கேற்றன. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய சார்பில் மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், அனைவருக்கும் வீடு, சாலை வசதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்த படகுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அலங்கார அணிவகுப்பை ஏராளமான சுற்றுலா பணிகள் ஆர்வத்துடண் கண்டு ரசித்தனர்.

Exit mobile version