2 வாரத்திற்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதனால் அந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சி சார்பில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடைத்தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட முடியாது என மறுத்துவிட்டது. மேலும் இதுகுறித்து 2 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Exit mobile version