தண்ணீர் லாரிகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அனைத்து தண்ணீர் லாரிகளும் உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அறிவிப்பாணையை வெளியிட, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் உள்ள வீட்டு உபயோக குடிநீர் இணைப்பை வணிக நோக்கில் பயன்படுத்துவதை தடுக்க கோரியும், கெளரிவாக்கத்தில் உள்ள விவசாய கிணறுகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதை தடுக்கக் கோரியும், இளையராஜா, நாகேஸ்வர ராவ் ஆகிய இருவரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வர்த்தக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீரை எடுத்து வழங்குவதற்கு உரிமம் பெற்றுள்ள லாரிகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டனர்.

அனைத்து தண்ணீர் லாரிகளும் உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்வது காட்டாயம் என அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Exit mobile version