5வது நாளாக நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 5 நாட்களாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 700க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 4ம் தேதி முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 700க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து, 40 தொகுதிகளுக்கான விண்ணப்ப படிவங்களை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெற்று வருகின்றனர். இந்த விருப்ப மனுக்களை அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முக்கூர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.

Exit mobile version