திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையான இன்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், சரோஜா உள்ளிட்டோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர். ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் தீர்த்த பிரசாதங்களை பெற்று, வேத பண்டிதர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.

இதனையடுத்து கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்தும், அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். இறுதியாக சடகோப ராமானுஜ பெரிய ஜீயரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர். பெரிய ஜீயர் சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்றார்.

Exit mobile version