மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் பலமுறை சந்தித்துள்ளனர் – ஓ.பன்னீர் செல்வம்

தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் பலமுறை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 18 எம்.எல்.ஏ.க்களுக்கு திரும்ப வருமாறு அழைப்பு விடுத்தது அ.தி.மு.க.வின் பெருந்தன்மை என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் பலமுறை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என குறிப்பிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் எனவும் அவர் கூறினார். அதற்கான பூர்வாங்க பணிகளை பொறுப்பில் உள்ளவர்கள் தொடங்கி விட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version