தேனியில் விரைவில் விவசாயம் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 

தேனி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் விரைவில் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சிக்காக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உத்தமபாளையம் அருகே உள்ள சங்கராபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த திட்டம் 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக செயல்படுத்தப்படும் என்றார்.

 

 

Exit mobile version